டெல்லி : ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.49 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை

டெல்லியில் வாகன சோதனையின் போது 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லி : ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.49 லட்சம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை
x
டெல்லியில் வாகன சோதனையின் போது 49 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. டெல்லியில்  சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 8 ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி கிழக்கு டெல்லியில் உள்ள கிருஷ்ணா நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வினோத் கோயல் என்பவர் ஓட்டி வந்த காரில் இருந்த 49 லட்சம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வியாபாரத்திற்காக அந்த பணத்தை கொண்டு சென்றதாக வினோத் கோயல் தெரிவித்தார். ஆனாலும் உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்