டெல்லியில் கடும் குளிர் - 40 நாட்களில் 413 பேர் பலி
டெல்லியில் நிலவி வரும் கடும் குளிருக்கு கடந்த 40 நாட்களில் மட்டும் 413 பேர் இறந்துள்ளனர்.
டெல்லியில், கடந்த இரு மாதங்களாக கடும் குளிர் நிலவி வருகிறது. மக்கள் வெளியே வர முடியாத அளவுக்கு குளிர் வாட்டுவதால், இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் ஜனவரி பத்தாம் தேதி வரை கடும் குளிர் காரணமாக 413 பேர் இறந்துள்ளது தெரிய வந்துள்ளது. குறிப்பாக ஜனவரி ஒன்றாம் தேதி முதல், பத்தாம் தேதி வரையிலான பத்து நாட்களில் மட்டும் வீடின்றி தெருவோரங்களில் வசிக்கும் 90 பேர் இறந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் டெல்லியில் குளிர் காரணமாக நேரிட்ட இறப்புகளில் இதுவே அதிகம் என்று கூறப்படுகிறது.
Next Story