ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் : வாட்ஸ் ஆப், கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவு

ஜவஹர்லால் நேரு பல்கலை கழகத்தில் மாணவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு காவல் ஆணையர், வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜேஎன்யூ மாணவர்கள் மீதான தாக்குதல் : வாட்ஸ் ஆப், கூகுள், ஆப்பிள் நிறுவனங்களுக்கு உத்தரவு
x
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள், பேராசிரியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான சிசிடவி பதிவுகள், வாட்ஸ் ஆப் உரையாடல்களை பாதுகாக்க கோரி பேராசிரியர்கள் 3 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை பரீசிலித்த டெல்லி உயர்நீதிமன்றம், மனு மீது பதில் அளிக்குமாறு, டெல்லி காவல் ஆணையர் , ஆப்பிள், வாட்ஸ் ஆப், கூகுள் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டது. இந்த தாக்குதல் தொடர்பான ஆவணங்களை தந்து உதவுமாறு தில்லி காவல்துறை குற்றப்பிரிவு துணை ஆணையர் ஜாய் திர்கி நாளேடுகளில் விளம்பரம் செய்திருந்த‌து குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்