திருப்பதி : பக்தர்கள் அனைவருக்கும் ஒரு இலவச லட்டு - ஜன.6 முதல் அமலுக்கு வருகிறது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யும் ஒவ்வொரு பக்தருக்கும் ஜனவரி 6ஆம் தேதி முதல் இலவசமாக ஒரு லட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது . மலைப்பாதையில் பாதயாத்திரையாக வந்து திவ்ய தரிசனம் டிக்கெட் பெற்றவர்களுக்கு மட்டும் இலவசமாக ஒரு லட்டு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது இலவச தரிசனத்திலும், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கும் சலுகை விலையில் 4 லட்டுகள் 70 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. சலுகை விலையில் லட்டுகள் வழங்குவதால் ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . விரைவில் சலுகை விலையில் வழங்கப்படும் லட்டுகள் ரத்து என்ற அறிவிப்பு வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story