"வருமான வரி சோதனை குறித்த உண்மைகள் தெரிய வரும்" - கல்கி பகவான் மகன் கிருஷ்ணாஜி கருத்து

கல்கி ஆசிரமத்தில் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் முறையாக வரி செலுத்தப்பட்டு வருவதாக கல்கி ஆசிரம பகவானின் மகன் கிருஷ்ணாஜி கூறினார்.
வருமான வரி சோதனை குறித்த உண்மைகள் தெரிய வரும் - கல்கி பகவான் மகன் கிருஷ்ணாஜி கருத்து
x
ஆந்திர மாநிலம் வரதபாளையம் அருகே உள்ள கல்கி ஆசிரமத்தின் சார்பில் கிராமங்களை தத்தெடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கல்கி  பகவானின் மகன் கிருஷ்ணாஜி மற்றும் அவரது மகள் லோக்கா ஆகியோர் பங்கேற்றனர். அப்போது பேசிய கிருஷ்ணாஜி, பழங்குடி மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் விதமாக, காய்கறி, பழ சாகுபடியில் அவர்களை ஈடுபடுத்த உள்ளதாக கூறினார். ஆசிரமத்தில் நடைபெற்ற சோதனையில், உண்மைகள் விரைவில் தெரியவரும் என்றும் அவர் கூறினார். அனைத்து வரிகளையும் ஆசிரமம் முறையாக செலுத்தி வருவதாகவும், சோதனைகளால் எந்தவித அச்சமும் இல்லை என்றும் கிருஷ்ணாஜி தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்