சபரிமலையில் போலீசார் நடத்திய கற்பூரயாளி வலம் - புலிமேல் ஐயப்பன் வேடமணிந்து காட்சியளித்த சிறுவன்
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற்று வருகிறது.
கேரளா மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டிற்கான மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. மண்டல பூஜை நிறைவுக்கு முன் தேவசம் போர்டு மற்றும் போலீசார் சார்பாக கற்பூரயாளி நடத்தப்படுவது வழக்கம். இந்த நிகழ்ச்சியில், புலி மேல் ஐயப்பன் போல வேடமணிந்த சிறுவன் காட்சியளித்தார். சிவன், முருகன், கணபதி மற்றும் சப்தரிசிகள் போல் போலீசார் வேடமணிந்து, வலம் வந்தனர். சண்ட மேளம், நாதஸ்வரம் மற்றும் சிங்காரி மேளம் இசைக்கப்பட்டு கற்பூரயாளி வெகு சிறப்பாக நடைபெற்றது.
Next Story