ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் கொள்ளை - ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேர் கைது
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் வருமானவரித் துறை அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் வியாபாரிகளிடம் வருமானவரித் துறை அதிகாரி போல் நடித்து மோசடியில் ஈடுபட்ட ரயில்வே தலைமை காவலர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நெல்லூர் மாவட்டத்தில் ஓடும் ரயிலில் தொடர்ந்து வியாபாரிகளிடம் பணம் பறித்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கண்காணிப்பில் ஈடுபட்டு வந்த நிலையில், இதுகுறித்து அனைத்தையும் ரயில்வே டி.எஸ்.பி. டிரைவராக பணி புரிந்து வந்த தலைமை காவலர் ஆஞ்சநேயலு தலைமை வகித்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரையும் அவருடன் இருந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story