திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து

திருப்பதி திருமலையில், லட்டுக்கு பூந்தி செய்யும் அறையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதியே புகை மூட்டமானது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே தீ விபத்து
x
திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே லட்டு செய்வதற்காக, பூந்தி தயாரிக்கும் கூடம் செயல்பட்டு வருகிறது. ஊழியர்கள் அங்கு பூந்தி தயாரித்துக்கொண்டிருந்தபோது, வெப்பம் அதிகமாகி, புகைக்குழாயில் தீ பற்றியது. இந்த தீ மளமளவென எரிந்ததால், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இதை தொடர்ந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள், போராடி தீ அணைத்தனர். தீ விபத்தால் அந்த பகுதியே புகை மூட்டமாக காட்சியளித்தன.


Next Story

மேலும் செய்திகள்