ரூ.150 கோடியில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் : இரவு நேர விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிப்பு

கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், நான்கு மாதங்களுக்கு பகல் நேர விமான சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.150 கோடியில் ஓடுபாதை சீரமைப்பு பணிகள் : இரவு நேர விமானங்கள் மட்டும் இயக்கப்படும் என அறிவிப்பு
x
கொச்சி சர்வதேச விமான நிலையத்தில், நான்கு மாதங்களுக்கு பகல் நேர விமான சேவைகள் நிறுத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 150 கோடி ரூபாய் மதிப்பில், விமான  ஓடுபாதை சீரமைப்பு பணிகள்  நடைபெற உள்ளதால், காலை 10 மணி முதல் மாலை 6 வரை  நான்கு மாதங்களுக்கு பகல் நேர விமான சேவைகள் ரத்து செய்யப்படுகின்றன. மறுசீரமைப்பு பணிகள் முடிவடைந்து, அடுத்த ஆண்டு மார்ச் இறுதியில் 24 மணி நேரமும் விமான சேவை அளிக்கப்படும்  என கொச்சின் விமான நிலையம் அறிவித்துள்ளது. இதையடுத்து இரவு நேரங்களில் அதிக பயணிகளை கையாள உள்ளதால், பாதுகாப்பு பணியாளர்கள் அதிகரிக்கப்பட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்