கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார், மோடி
இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இலங்கை அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை, பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இரு நாடுகளுக்கு இடையிலான வரலாறு, கலாச்சாரம் மற்றும் சமூக உறவுகள் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவுக்கு வருமாறு கோத்தபய-க்கு அழைப்பு விடுத்தார். அந்த அழைப்பை அவர் ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து தெரிவித்து, தனது சமூகவலைதள பக்கத்தில் தமிழில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.
Next Story