"சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை" - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்

நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
சபரிமலைக்கு பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை - கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன்
x
நீதிமன்ற தீர்ப்பின் படி சபரிமலைக்கு பக்தர்கள் பிளாஸ்டிக் பாட்டில்களில் குடிநீர் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில், தென் மாநில அமைச்சர்கள் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இதில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், புதுச்சேரி விவசாய துறை அமைச்சர் கமலக்கண்ணன், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா அமைச்சர்கள் பங்கேற்றனர். கூட்டத்திற்கு பின் பேசிய பினராயி விஜயன்,  தென்மாநில அரசுகள் பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். 

Next Story

மேலும் செய்திகள்