ஆந்திர மாநிலம் சித்தூரில் குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை
ஆந்திர மாநிலம் சித்தூரில் தவமிருந்து பெற்ற குழந்தையுடன், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் தவமிருந்து பெற்ற குழந்தையுடன், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் 9 வயது மகள் காயத்ரி ஆகிய 3 பேரும், இரவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததையடுத்து கதவை உடைத்து பார்த்த போது 3 பேரும் உள்ளே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக, இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரவி, புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பிறகே, காயத்ரி பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story