ஆந்திர மாநிலம் சித்தூரில் குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை

ஆந்திர மாநிலம் சித்தூரில் தவமிருந்து பெற்ற குழந்தை​யுடன், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் சித்தூரில் குடும்ப பிரச்சினையால் கணவன், மனைவி தற்கொலை
x
ஆந்திர மாநிலம் சித்தூரில் தவமிருந்து பெற்ற குழந்தை​யுடன், கணவன், மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சந்தப்பேட்டையை சேர்ந்த ரவி என்பவர், அவரது மனைவி புவனேஸ்வரி மற்றும் 9 வயது மகள் காயத்ரி ஆகிய 3 பேரும், இரவில் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்துள்ளனர். நீண்ட நேரமாகியும் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்ததையடுத்து கதவை உடைத்து பார்த்த போது 3 பேரும் உள்ளே உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது. குடும்ப பிரச்சினை காரணமாக, இந்த தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ரவி, புவனேஸ்வரி தம்பதிக்கு திருமணமாகி 25 ஆண்டுகளுக்கு பிறகே, காயத்ரி பிறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்