"தீவிரவாதம் மறைமுகமாக வளர்ச்சியை தடுக்கிறது" - ராஜ்நாத் சிங்

தீவிரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
தீவிரவாதம் மறைமுகமாக வளர்ச்சியை தடுக்கிறது - ராஜ்நாத் சிங்
x
தீவிரவாத தாக்குதலால், வளர்ச்சி பாதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கன்ட் சென்றுள்ள அவர், அங்கு நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு  மாநாட்டில் பேசினார். அப்போது, எந்தவித இரட்டை கருத்துகளும் இன்றி, தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்றார். நமது வளர்ச்சியை, மறைமுகமாக பாதிக்கும் தீவிரவாதத்தை ஒருங்கிணைந்து ஒடுக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்