உத்தரப்பிரதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறி விபத்து : 12 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் அருகே உள்ள முகமதாபாத்தில், சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறி விபத்து : 12 பேர் பலி
x
உத்தரப்பிரதேச மாநிலம் மாவ் அருகே உள்ள முகமதாபாத்தில், சமையல் எரிவாயு உருளை வெடித்து சிதறிய விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 6 பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தேசிய பேரிடர் மீட்டுப் படையினர் இடிபாடுகளை அகற்றி வரும் நிலையில்,  பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ள முதலமைச்சர் ஆதித்யநாத், உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்