"தானியங்களை சேமித்து வைக்க நவீன கிடங்குகள்" - பிரதமர் மோடி தகவல்

25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தானியங்களை சேமித்து வைக்க நவீன கிடங்குகள் - பிரதமர் மோடி தகவல்
x
25 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் கிராமப்புற உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தற்போது கிராமச் சாலைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக, மும்பையில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போது பிரதமர் மோடி தெரிவித்தார். முன்பு எப்போதையும் விட தற்போது, கிராமப்புற மேம்பாட்டுக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். நவீன வசதிகளுடன் கூடிய  தானியங்களை சேர்த்து வைக்கும் கிடங்குகள் அமைக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்