மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை

மும்பையில் மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.
மெட்ரோ ரயில் பணிகளுக்காக மரங்கள் வெட்டும் விவகாரம் : பொதுநல வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
x
மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் புறநகர் பகுதியான ஆரேவில் உள்ள இரண்டாயிரத்து 646 மரங்களை, மெட்ரோ ரயில் பணிகளுக்காக வெட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராடி வந்த நிலையில், மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அந்த பகுதி வனப்பகுதி அல்ல என்று தெரிவித்ததுடன், மரங்களை வெட்ட தடைவிதிக்க மறுத்து விட்டது. இந்த தீர்ப்பை தொடர்ந்து  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு மரங்களை வெட்டி அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.   ஆரேவில் எதிர்ப்பு அதிகரித்து வருவதை அடுத்து அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. 

இந்நிலையில், மரங்களை வெட்ட தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி அளவில் இந்த மனு சிறப்பு அமர்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்