திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: "சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி" - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழாவின் ஏழாம் நாளன்று இரவு மலையப்பசாமி சந்திர பிரபை வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருப்பதி பிரம்மோற்சவம் கோலாகலம்: சந்திர பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி - பக்தர்கள் ஆடிப் பாடி மகிழ்ச்சி
x
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவத்தின் ஏழாவது நாள் விழாவன்று காலை  தங்க சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணர் அலங்காரத்தில் நான்கு மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் கோலட்டம், தப்பட்டம் மற்றும் பஜனைகள் பாடியபடி அணிவகுத்து சென்றனர். இதை தொடர்ந்து ஊஞ்சல் சேவை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. பின்னர் இரவு சூரிய பிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெண் பக்தர்கள் கோலாட்டம் உள்ளிட்ட நடனங்களை ஆடி சாமியை வழிபாடு செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்