ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வதேராவின் கோரிக்கை ஏற்பு

பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்ற அனுமதி. லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கியதாக கறுப்பு பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.
ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல அனுமதி - சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வதேராவின் கோரிக்கை ஏற்பு
x
பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா வெளிநாடு செல்ல சிபிஐ சிறப்பு நீதிமன்ற அனுமதி அளித்துள்ளது. லண்டனில் முறைகேடாக சொத்து வாங்கியதாக கறுப்பு பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த அமலாக்கத்துறையின் பரிந்துரையின் பேரில் அவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்து. இந்நிலையில், வருகின்ற செப்டம்பர் 21 முதல் அக்டோபர் 8 ஆம் தேதி வரை ஸ்பெயினுக்கு செல்ல வேண்டும் என்று ராபர்ட் வதேரா கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்ற சிறப்பு நீதிமன்றம் அவருக்கு அனுமதியளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்