ராஜஸ்தான் ஆளுநராக பொறுப்பேற்றார், கல்ராஜ் மிஸ்ரா
ராஜஸ்தான் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பொறுப்பேற்றுள்ளார்.
ராஜஸ்தான் ஆளுநராக கல்ராஜ் மிஸ்ரா பொறுப்பேற்றுள்ளார். ராஜஸ்தான் ஆளுநராக இருந்த கல்யாண் சிங்கின் பதவி காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து, ஹிமாசல பிரதேச ஆளுநராக இருந்த கல்ராஜ் மிஸ்ரா இடமாற்றம் செய்யப்பட்டடார். இந்நிலையில், அவர் இன்று பதவியேற்றார். அவருக்கு அம்மாநில உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர், எதிர்கட்சி தலைவர் மற்றும் அமைச்சர்கள் கலந்து கொண்டனர். பதவியேற்புக்கு பிறகு, அணிவகுப்பு மரியாதையை கல்யாண் சிங் ஏற்றுக் கொண்டார்.
Next Story