அரசு பள்ளிகளில் பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டும் - அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு புதுச்சேரி முதல்வர் வேண்டுகோள்
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்களது குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கேட்டுக் கொண்டுள்ளார். புதுச்சேரி பள்ளிக் கல்வி இயக்ககம் சார்பில் நடைபெற்ற ஆசிரியர் தினவிழாவில் அவர் பங்கேற்று பேசினார். அப்போது பட்ஜெட்டில் 6 சதவீத நிதி பள்ளிக்கல்வித்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு பள்ளிகளை பராமரிக்க 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். விழாவில், முதல்முறையாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.
Next Story