"விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்து அறிவிப்பேன்" - நிர்மலா சீத்தாராமன் தகவல்

பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
x
பல்வேறு துறையினருடன் அரசு பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும், விரைவில் சில துறைகளுக்கான சலுகைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட உள்ளதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் மத்திய நேரடி மற்றும் மறைமுக வரியின் அதிகாரிகள், ஊழியர்களுடன் ஆலோசனை கூட்டம்  நடைபெற்றது. இதில் பங்கேற்ற அவர், வரித்துறை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதனைத்தொடர்ந்து,
செய்தியாளர்களை சந்தித்த அவர், வாகன உற்பத்திக்கான ஜி.எஸ்.டி வரியை குறைப்பது குறித்து ஜி.எஸ்.டி. கவுன்சிலே முடிவெடுக்கும் என்றும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்