புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது.
x
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது. பேரவையில் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பால் கொள்முதல் விலையும் 6 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் விலையானது, 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது,  நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும்  என்று நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்