புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது.
தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது. பேரவையில் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பால் கொள்முதல் விலையும் 6 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் விலையானது, 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்று நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.
Next Story