சில ஆண்டுகளாக நாட்டில் விரும்பத்தகாத நிகழ்வுகள் அரங்கேற்றம் : முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குற்றச்சாட்டு
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக சில விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருவதாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். டெல்லியில் ராஜீவ் காந்தி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிய மன்மோகன்சிங், இத்தகைய நடவடிக்கையால் சகிப்புதன்மை அற்ற நிலை, மத அடிப்படையில் மக்களை தனிமைப்படுத்தும் செயல் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிரான வன்முறை தாக்குதல், குழுத் தாக்குதல் போன்றவை அரங்கேறி வருவதாகம், இது நாட்டின் அரசியல் முறைக்கு உகந்தது அல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story