"எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள தயார்" - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி

எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
எந்த ஒரு சவாலையும் எதிர்கொள்ள தயார் - இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் உறுதி
x
எந்த ஒரு சவாலையும் எதிர் கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய ராணுவ தளபதி பிபின் ராவத் பேசுகையில், பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் பாதுகாப்பு படையினரை குவிப்பது தொடர்பாக கவலைப்பட வேண்டியது எதுவும் கிடையாது என்றும், எந்தஒரு பாதுகாப்பு சவாலையையும் எதிர் கொள்வதற்கு இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்றும் தெரிவித்தார். எல்லையில் பாகிஸ்தான் அதிகமான படைகளை குவிக்கிறது என்பது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்கலாம், இது இயல்பானது என்றும் இதுதொடர்பாக கவலையடைய எதுவும் இல்லை என்றும் பிபின் ராவத் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்