"சிந்திக்க நேரம் இல்லை, குழந்தைகளை தோளில் சுமந்தேன்" : மக்களின் பாராட்டை பெற்ற குஜராத் போலீஸ்...

குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், கல்யாண்பர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது.
சிந்திக்க நேரம் இல்லை, குழந்தைகளை தோளில் சுமந்தேன் : மக்களின் பாராட்டை பெற்ற குஜராத் போலீஸ்...
x
குஜராத் மாநிலம், மோர்பி மாவட்டம், கல்யாண்பர் கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. அப்போது வெள்ளத்தில் சிக்கிய 2 குழந்தைகளை குஜராத் போலீஸ் பிரிதிவிராஜ் ஜடேஜா தனது தோளில் சுமந்தபடி, இடுப்பளவு தண்ணீரில் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவு அழைத்து சென்றார். இந்த காட்சிகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து பாராட்டி வரும் நிலையில், சிந்திக்க நேரமில்லாத சூழலில் குழந்தைகளை காப்பாற்றும் பணியை மேற்கொண்டதாக குஜராத் போலீஸ் பிரிதிவிராஜ் ஜடேஜா தெரிவித்துள்ளார். மேலும், எந்த விலை கொடுத்தாவது அனைவரையும் மீட்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்