புதுச்சேரியில் செல்போன் பழுது பார்க்கும் தொழிலாளி மீது தாக்குதல்

புதுச்சேரியில் செல்போனை பழுதுபார்க்க பணம் கேட்ட தொழிலாளரை தாக்கி, அவரது கடையை அடித்து நொறுக்கிய ரவுடி உள்ளிட்ட மூவரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரியில் செல்போன் பழுது பார்க்கும் தொழிலாளி மீது தாக்குதல்
x
தட்டாஞ்சாவடி ரெயின்போ நகர் பகுதியில் செல்போன் பழுது பார்க்கும் கடை நடத்தி வருபவர் ஜெயச்சந்திரன். நேற்றிரவு இவரது கடைக்கு வந்த 3 பேர், தங்களது செல்போனை பழுது பார்க்க கூறியுள்ளனர். அதற்கு ஆயிரத்து 500 ரூபாய் செலவாகும் என்று கூறிய ஜெயச்சந்திரன், முன்பணமாக ஆயிரம் ரூபாய் தருமாறு  கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும், பணம் தர மறுத்து ஜெயச்சந்திரனுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.  வாக்குவாதம் முற்றவே, அவர்கள் ஜெயச்சந்திரனை கடுமையாக தாக்கிவிட்டு, அவரது கடையின் கதவுகளையும் அடித்து நொறுக்கி உள்ளனர். இது தொடர்பாக புகாரின் பேரில் கவுண்டம்பாளையத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரூபன், பிரசன்னா, சேகர் ஆகியோரை கைதுசெய்து தன்வந்திரி போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.       


Next Story

மேலும் செய்திகள்