ஷீலா தீட்சித் மரணம் : அரசு மரியாதையுடன் இன்று, உடல் அடக்கம்

உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷீலா தீட்சித், புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
ஷீலா தீட்சித் மரணம் : அரசு மரியாதையுடன் இன்று, உடல் அடக்கம்
x
உடல் நலம் பாதிக்கப்பட்ட ஷீலா தீட்சித், புதுடெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.காலமானதை தொடர்ந்து அவரது உடல் அஞ்சலிக்காக நிஜாமுதீன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு உள்ளது. ஷீலா தீட்சித் உடலுக்கு மலர் வளையம் வைத்து, பிரதமர் நரேந்திர மோடி, அஞ்சலி செலுத்தினார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்களும் ஷீலா தீட்சித் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, புது டெல்லியில் இன்று பிற்பகல்,  அரசு  மரியாதையுடன் ஷீலா தீட்சித் உடல் அடக்கம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்