இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் - குமாரசாமிக்கு கர்நாடக மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு

கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளார்.
x
கர்நாடக சட்டப்பேரவையில், நம்பிக்கை தீர்மானம் வருகிற திங்கட்கிழமை அன்றும் தொடரும் என, எதிர்ப்பார்ப்பதாக முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார். விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள், 20 பேர், இது வரை பங்கேற்கவில்லை என்றும், எனவே, இது திங்கட்கிழமையன்றும் தொடரும் என எதிர்ப்பார்ப்பதாக கூறினார். இதனிடையே, கர்நாடக சட்டப்பேரவையில் இன்று மாலை 6 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என, அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா கெடு விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்