முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்

ஆந்திராவில், முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முன்னாள் மனைவியை கொலை செய்ய வந்தவர் கைது, சுற்றிவளைத்து கத்தியை பறிமுதல் செய்த போலீசார்
x
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகேயுள்ள பன்லகுடாவை சேர்ந்த சுவர்ணா அதே பகுதியை சேர்ந்த சாய்கிரணை காதலித்து திருமணம் செய்துள்ளார். திருமணமான பிறகு தொடர்ந்து சண்டை இருந்து வந்த நிலையில், விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து வாழ்ந்துள்ளனர். 

இந்த நிலையில், சுவர்ணாவையும், அவரது தாயாரையும் தாக்கியது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட சாய்கிரண் சமீபத்தில் விடுதலையாகி வந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த சாய் கிரண், சுவர்ணாவுக்கு போன் செய்து அவரை கொலை செய்யப்போவதாக தெரிவித்துள்ளார். இதனையடுத்து சுவர்ணா அளித்த புகாரின் பேரில், அவரது வீட்டின் அருகே போலீசார் காத்திருந்துள்ளனர். அப்போது கத்தியுடன் சுவர்ணாவை கொலை செய்ய வந்த சாய்கிரணை சுற்றிவளைத்து பிடித்து போலீசார் கைது செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்