ஆந்திரா : கள்ள தொடர்புக்கு தடையாக இருந்த மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவன்
ஆந்திர மாநிலத்தில் மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
மதனப்பள்ளியில் வசித்து வந்த அம்ஜத் பாஷா - தஹசீன் தம்பதிக்கு 3 குழந்தைகள். கடந்த 2 நாட்களுக்கு முன், தஹசீன், ரத்த வெள்ளத்தில் வீட்டில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொலையாளி குறித்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, கணவன் அம்ஜத் பாஷாவே மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. அம்ஜத் பாஷாவுக்கு பல பெண்களிடம் தொடர்பு இருந்த நிலையில், இதற்கு மனைவி தடையாக இருந்ததால், இந்த கொலையை செய்துவிட்டு நாடகமாடியுள்ளார். இதனையடுத்து, அம்ஜத் பாஷாவை போலீசார் கைது செய்தனர்.
Next Story