புதுச்சேரி: கோழிக்கறி வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை - குற்றவாளி கைது

புதுச்சேரி நெல்லித்தோப்பில் கோழிக்கறி வியாபாரி, தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
புதுச்சேரி: கோழிக்கறி வியாபாரி தலையில் கல்லை போட்டு கொலை - குற்றவாளி கைது
x
புதுச்சேரி நெல்லித்தோப்பில் கோழிக்கறி வியாபாரி, தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நெல்லித்தோப்பு மார்க்கெட்டில் கோழிக்கறி கடை வைத்துள்ள தமிழ்வாணன் என்பவர், அதே மார்க்கெட்டில் வேலை பார்த்து வந்த தேவா என்பவரிடம் மதுபோதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தேவா, தமிழ்வாணன் தூங்கிக்கொண்டிருந்த போது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், தேவாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Next Story

மேலும் செய்திகள்