முகநூல் மூலம் ஒன்று சேர்ந்து ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கும் இளைஞர்கள்

முகநூல் மூலம் ஒன்று சேர்ந்த இளைஞர்கள், குழுவாக இணைந்து, புதுச்சேரி மக்களின் பாராட்டுக்களை பெற்று வருகின்றனர்.
x
சமூக வலைதளங்கள் மூலம், ஆதரவற்றோருக்கு உதவ முடியும் என்பதை செயல்படுத்தி காட்டி உள்ளனர், புதுச்சேரியை சேர்ந்த இளைஞர்கள் சிலர். உணவை வீணாக்காதீர்கள் என்ற முழக்கத்துடன் முகநூலில் குழுவை தொடங்கிய இவர்கள், ஆரம்பத்தில் தங்களது பிறந்தநாளின்போது, ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கி உள்ளனர். இதற்கு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதை தொடர முடிவெடுத்தனர். "நோ வேஸ்ட் ஃபுட் இன் பாண்டி" (No Waste Food In Pondy) என்ற பெயரில் ஒரு குழுவாக இணைந்த இந்த இளைஞர்கள், திருமணம், பிறந்தநாள், புதுமனை புகுவிழா என சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்களை எல்லாம் தேடிச் சென்று அங்கு மீதமாகும் உணவை நேரில் பெற்றனர். அவற்றை சிறு, சிறு பொட்டலங்களாக கட்டி, தங்களது இருசக்கர வாகனங்கள் மூலம் எடுத்துச்சென்று சாலையோரத்தில் வசிப்பவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்  மற்றும் இயலாதவர்களுக்கு நாள்தோறும் வழங்கி வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்