பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி

அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
பிள்ளையை பள்ளிக்கு அனுப்பும் தாய்க்கு ரூ.15ஆயிரம் - ஜெகன்மோகன் ரெட்டி
x
அடுத்த ஆண்டு ஜனவரி 2ம் தேதி முதல் குழந்தைகளை, பள்ளிகளுக்கு அனுப்பும் ஏழை, எளிய குடும்பங்களை சேர்ந்த தாய்க்கு ஆண்டுதோறும் 15 ஆயிரம் ரூபாய் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் அமராவதியில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, அனைத்து விவசாயிகளுக்கும் வருகிற அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 12 ஆயிரத்து 500  ரூபாய் வழங்கப்படும் என்றும்  50 வீட்டிற்கு ஒரு ஏஜென்ட் போடப்பட்டு அவர் மூலமாக ரேஷன் பொருட்கள் வீட்டிற்கே டோர் டெலிவரி செய்யப்படும் என்றும் கூறினார்

Next Story

மேலும் செய்திகள்