மீண்டும் பாதை மாறிய 'வாயு' புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு

அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் பாதை மாறிய வாயு புயல் : குஜராத்தை தாக்கும் என அறிவிப்பு
x
அரபிக் கடலில் உருவான வாயு புயல் மீண்டும் பாதை மாறி குஜராத்தை தாக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிதீவிர புயலாக மாறிய வாயு புயல் கடந்த 13 -ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த புயல் குஜராத்தை தாக்காமல் ஓமன் நாட்டை நோக்கி பாதை மாறி சென்றது. இந்நிலையில் மேற்கு நோக்கி நகர்ந்து சென்ற வாயு புயல், மீண்டும், குஜராத் மாநிலம் கட்ச் நோக்கி திரும்பும் என கண்டறியப்பட்டுள்ளது. புயல் தற்போது வலு இழந்து காணப்பட்டாலும் நாளை அல்லது நாளை மறுநாள், குஜராத் மாநிலம் கட்ச் வளைகுடா பகுதியை தாக்கும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்