திருகாமீசுவரர் ஆலய பிரம்மோற்ச தேரோட்டம் : கிரண்பேடி, நாராயணசாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர்

புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ தேரோட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருகாமீசுவரர் ஆலய பிரம்மோற்ச தேரோட்டம் : கிரண்பேடி, நாராயணசாமி தேரை வடம்பிடித்து இழுத்தனர்
x
புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற திருக்காமீசுவரர் ஆலய பிரம்மோற்சவ தேரோட்டத்தில், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். கடந்த 5ஆம் தேதி தொடங்கிய பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தில் ஆளுநர், முதலமைச்சரோடு அமைச்சர்கள் நமச்சிவாயம், கந்தசாமி, சபாநாயகர் சிவகொழுந்து, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம் ஆகியோரும் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சுவாமியை வழிபட்டனர். தேரோட்டத்தையொட்டி அப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்