இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம் : 542 புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்

பாஜக எம்.பி. வீரேந்திரகுமார், நாடாளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இடைக்கால சபாநாயகராக பாஜக எம்.பி. வீரேந்திரகுமார் நியமனம் : 542 புதிய எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்
x
பாஜக எம்.பி. வீரேந்திரகுமார், நாடாளுமன்ற மக்களவையின் இடைக்கால சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். மத்திய பிரதேச மாநிலம், திகம்ஹர் மக்களவை தொகுதி எம்.பியான இவர், முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். வருகிற 17 ஆம் தேதியன்று புதிய நாடாளுமன்ற மக்களவை கூட உள்ள நிலையில், 542 புதிய எம்.பிக்களுக்கு பாஜக எம்.பி. வீரேந்திர குமார், பதவிப் பிரமமாணம் செய்து வைக்கிறார். இடைக்கால சபாநாயகராக மேனகா காந்தி, நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வீரேந்திரகுமார் தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். புதிய மக்களவை சபாநாயகர் தேர்வு செய்யப்படும் வரை வீரேந்திர குமார், சபாநாயகராக செயல்படுவார் .

Next Story

மேலும் செய்திகள்