பிரதமர் மோடியின் விமானத்திற்கு அனுமதி வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை

பாகிஸ்தான் வான் வழியாக பிரதமர் மோடியின் விமானம் பறந்து செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்நாட்டிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
பிரதமர் மோடியின் விமானத்திற்கு அனுமதி வேண்டும் - பாகிஸ்தானிடம் இந்திய அரசு கோரிக்கை
x
பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது  பயங்கரவாத அமைப்பினர் கடந்த பிப்ரவரி மாதம் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் , இந்திய துணை ராணுவப்படை வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய போர் விமானங்கள் பறந்து சென்று பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் முகாமை குண்டுகள் வீசி அழித்தது. இதனால்  பாகிஸ்தான் அரசு, தனது வான்வெளியில் வெளிநாட்டு விமானங்கள் பறக்க தடை விதித்தது.  பாகிஸ்தான் வான்வெளியில் 2 வழித்தடத்தில் மட்டுமே விமானங்கள் பறந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 9  வழித்தடங்களில் விமானங்கள் செல்ல தடை நீடித்து வருகிறது. இந்நிலையில் வரும் 13 , 14 தேதிகளில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கிர்கிஸ்தான் செல்கிறார். அவரது விமானம்  பாகிஸ்தான் வான் வழியாக பறந்து செல்வதற்கு அனுமதி அளிக்குமாறு அந்நாட்டிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்