காங். கட்சி தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கு : திரும்ப பெற அனில் அம்பானி முடிவு

காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார்.
காங். கட்சி தலைவர் ராகுல் மீதான அவதூறு வழக்கு : திரும்ப பெற அனில் அம்பானி முடிவு
x
காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி வாபஸ் பெற முடிவு செய்துள்ளார். ரபேல் விவகாரத்தில், அவதூறு பரப்பியதாக, அக்கட்சி மீது அனில் அம்பானி, அவமதிப்பு வழக்கு தொடுத்து 5000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியிருந்தார்.  இந்நிலையில் திடீர் திருப்பமாக ரபேல் வழக்கில் காங்கிரஸ் கட்சி மீதும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதும் தொடுத்து இருந்த அவதூறு வழக்கை அனில் அம்பானி திரும்ப பெற உள்ளார். நீதிமன்ற விடுமுறை முடிந்த பின் வழக்கு வாபஸ் பெறப்பட உள்ளது. இதற்கான கடிதம் தற்போது அளிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்