ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : புயல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர் ப​லி

ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவில் கரை கடந்த ஃபானி புயல் : புயல் வெள்ளத்தில் சிக்கி 3 பேர்  ப​லி
x
ஒடிசா மாநிலத்தில் கரை கடந்த ஃபானி புயல் அம்மாநிலத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில்  உருவான ஃபானி புயல் தமிழகத்தின் வடகடலோர பகுதியில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒடிசா மாநிலம் கோபால்பூர்-சந்த்பாலிக்கு இடையே நேற்று காலை 8 மணி முதல் கரையை கடக்க தொடங்கியது. அப்போது பூரி, கோபால்பூர் உள்ளிட்ட இடங்களில் மணிக்கு சுமார் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த  காற்று வீசியது. இதில் மரங்கள், மின்கம்பங்கள் வேரோடு சாய்ந்தன. வீட்டின் கூரைகள் பறந்தன. ஏராளமான வீடுகள் பலத்த சேதம் அடைந்தன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 11 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். இதனிடையே மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் சில பகுதிகளிலும் பலத்த காற்றும், மழையும் கொட்டி தீர்த்து வருகிறது. ஒடிசா மாநிலத்தில் பானி புயல் பாதிப்புக்கு 3 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்