ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளுக்கு வழக்கம் போல் அனுமதி - சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து

புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது.
ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகளுக்கு வழக்கம் போல் அனுமதி - சமூக வலைத்தளத்தில் கிரண் பேடி கருத்து
x
புதுச்சேரி அரசின் நடவடிக்கைகளில் தலையிட துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கிய அதிகாரத்தை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இது குறித்து, சமூக வலைதளத்தில் கருத்தை பதிவிட்டுள்ள கிரண்பேடி, நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை ஆய்வு செய்து வருவதாக கூறியுள்ளார். மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வழக்கம் போல் ஆளுநர் மாளிகைக்கு வரும் கோப்புகள் ஆய்வு செய்து அனுமதி அளிக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். புதுச்சேரியிலுள்ள அனைத்து மக்களும் விரைவான முடிவுகளை எடுக்கும் ஆளுமை கொண்டவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்