வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி...உயர்கல்வி படித்தும் வேலையில்லை...அதிர்ச்சி ஆய்வறிக்கை

இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்ட அளவிற்கு வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் தோல்வி கண்டுள்ளதாக அஸிம் பிரேம்ஜி பல்கலைக் கழகம் ஆய்வில் தெரிவித்துள்ளது.
x
2016 ஆம் ஆண்டில் கிராமங்களில் 100 பேரில் 68 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது என்றால் தற்போது 64 ஆக அது குறைந்துள்ளது. நகர்புற வேலை வாய்ப்பு 2016 ஆம் ஆண்டில் 100-க்கு 72 பேருக்கு வேலை கிடைத்தது என்றால், தற்போது 68 ஆக குறைந்துள்ளது. நகர்புறங்களில் உயர்கல்வி முடித்துவிட்டு வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை 76 லிருந்து 78 ஆக அதிகரித்துள்ளது. 12ஆம் வகுப்புக்கும் குறைவான கல்வித் தகுதி கொண்டவர்களின் எண்ணிக்கை 72-இல் இருந்து 68 ஆகம் குறைந்துள்ளதுடன் அவர்களின் வேலைவாய்ப்பும் குறைந்துள்ளது.

வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் அதிகரித்துள்ளன. பட்டப்படிப்பு முடித்தவர்களில் வேலையற்றோர் எண்ணிக்கை 16 புள்ளி 3 சதவீதமாக உள்ளது. முதுநிலை பட்டம் பெற்றவர்களில் 14 புள்ளி 2 சதவீதம் பேருக்கு வேலை இல்லை. தென் மாநிலங்களிலும், வட கிழக்கு மாநிலங்களிலும் பெண்கள் அதிகமாக வேலைக்குச் செல்கின்றனர். சத்தீஸ்கர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் 1000 பேருக்கு  476-இல் இருந்து 560 பெண்கள் வேலைக்குச் செய்கின்றனர். தமிழ்நாடு, தெலுங்கானா, மகாராஷ்டிரா, அருணாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் 326-இல் இருந்து 400 பெண்கள் வேலைக்கு  செல்கின்றனர். 

2000ஆம்  ஆண்டில் தொழில் திறன் 3 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது என்றால், ஊதிய உயர்வு 1 புள்ளி 5 சதவீத அளவிலேயே உள்ளது. இந்த போக்கு 2016ஆம் ஆண்டிலும் தொடர்கிறது.

2000ஆம் ஆண்டுக்கு பின்னர் தொழில் நிறுவனங்களில் மேலாளர்களின் ஊக்க ஊதியங்கள் 1 புள்ளி 5 சதவீதத்தில் இருந்து 3 சதவீதம் வரை அதிகரித்துள்ளன. பெருவாரியான மக்களுக்கு உத்திரவாதமான மற்றும் நிலையான வருமானம் இல்லை என்றும், தொழில் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வி அடைந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்