விடுமுறை முடியும் முன்பே பணிக்கு திரும்பினார் அபிநந்தன்

பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி கமாண்டர் அபிநந்தன், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார்.
விடுமுறை முடியும் முன்பே பணிக்கு திரும்பினார் அபிநந்தன்
x
பாகிஸ்தானில் சிறை பிடிக்கப்பட்டு, விடுவிக்கப்பட்ட இந்திய விமானப்படை விமானி கமாண்டர் அபிநந்தன், மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். பிப்ரவரி 27-ஆம் தேதி இந்திய விமானம் பாகிஸ்தான் விமானப்படையால் சுடப்பட்டதில், பாகிஸ்தானில் விழுந்த விமானி அபிநந்தன் சிறைபிடிக்கப்பட்டார். இதனையடுத்து, கடந்த 1-ஆம் தேதி  பாகிஸ்தான் அவரை இந்தியாவிடம் ஒப்படைத்தது.  பாகிஸ்தானியர்கள் அவரை தாக்கியதால், படுகாயம் அடைந்திருந்த அபிநந்தனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் 4 வாரங்கள் விடுமுறையில் செல்லும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிலையில் விடுமுறை முடியும் முன்பே ஸ்ரீநகரில் உள்ள விமானப்படை தளத்துக்கு பணிக்கு திரும்பி விட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

Next Story

மேலும் செய்திகள்