ரத்தக்கறையுடன் கிடந்த மீன் வியாபாரியின் உடை - கடத்தல் நாடகம் ஆடிய மீன் வியாபாரி

புதுச்சேரியில் மீன்வியாபாரி ஒருவர் அரங்கேற்றிய கடத்தல் நாடகம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது.
ரத்தக்கறையுடன் கிடந்த மீன் வியாபாரியின் உடை - கடத்தல் நாடகம் ஆடிய மீன் வியாபாரி
x
புதுச்சேரியில் மீன்வியாபாரி ஒருவர் அரங்கேற்றிய கடத்தல் நாடகம், கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் அம்பலமாகியுள்ளது. புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியைச் சேர்ந்த மீன்வியாபாரி கணேசன், கடந்த 3 ஆம் தேதி முதல் மாயமாகிவிட்டதாக அவரின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். துறைமுகம் அருகே ரத்தம் படிந்த அவரது சட்டை, செல்போன், இருசக்கர வாகனம் கண்டெடுக்கப்பட, போலீசார் தேடுதல் வேட்டையை தொடர்ந்தனர். இந்நிலையில் திடீரென தானாகவே திரும்பி வந்த கணேசன் தன்னை மர்ம நபர்கள் கடத்தி சென்றதாக கூறியுள்ளார். ஆனால் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த‌தில் அவர் தனியாகவே செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார்  கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், கடன் தொல்லையால் கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதை மீன்வியாபாரி கணேசன் ஒப்புக்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்