காஷ்மீரில் ராணுவ வீரர் கடத்தப்படவில்லை : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம்
காஷ்மீரில் ராணுவ வீரர் ஒருவரை தீவிரவாதிகள் வீடுபுகுந்து கடத்திச் சென்றதாக வெளியான தகவல், முற்றிலும் தவறானது என்று மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
ஜம்முகாஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த ராணுவ வீரரான முகமது யாசின், விடுமுறையை கழிப்பதற்காக வீட்டிற்கு வந்த போது, தீவிரவாதிகள் அவரை வீடுபுகுந்து கடத்திச் சென்று விட்டதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு முற்றிலும் மறுப்பு தெரிவித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. முகமது யாசின் பாதுகாப்புடன் இருப்பதாகவும், அவர் கடத்தப்பட்டதாக வந்த தகவல் தவறானது என்றும் தெரிவித்துள்ளது.
Next Story