மீன் வியாபாரி மாயம் - ரத்தம் படிந்த சட்டை கண்டெடுப்பு...

துறைமுகம் பகுதி அருகே காணாமல்போன கணேசனின் செல்போன், இருசக்கர வாகனம், ரத்தம் படிந்த சட்டையை உள்ளிடவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
x
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அருகே உள்ள தட்டாஞ்சாவடி பகுதியை சேர்ந்த கணேசன், மீன்களை கொள்முதல் செய்து விற்பனை செய்து வந்தார். கடந்த மூன்றாம் தேதி முதல் கணேசனை காணவில்லை என்று குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்நிலையில் துறைமுகம் பகுதி அருகே கணேசனின் செல்போன், இருசக்கர வாகனம், ரத்தம் படிந்த சட்டையை உள்ளிடவற்றை போலீசார் கண்டெடுத்துள்ளனர். இதனையடுத்து அப்பகுதியில் ஹெலிகாம் மூலம் தேடுதல் மேற்கொண்ட போலீசார், தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்