இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடி தாக்குதல்...

இந்திய விமானப்படை விமானங்கள் இன்று அதிகாலை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து அதிரடியாக தாக்குதல் நடத்தி தீவிரவாத முகாம்களை அழித்தது.
x
கடந்த 14ஆம் தேதி காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் , 40 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று புகுந்து அதிரடி தாக்குதலை நடத்தியது. அதிகாலை 3.30 மணியளவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டிச் சென்ற 12 மிராஷ் ஜெட் விமானங்கள், தீவிரவாத முகாம்கள் மீது ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை வீசி அழித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய விமானப்படை கூறும்போதும், இந்தத் தாக்குதலில் எல்லைப் பகுதியில் முகாமிட்டிருந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்