"தனிமாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்" : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து கோரி, வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தனிமாநில அந்தஸ்து கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
டெல்லிக்கு தனிமாநில அந்தஸ்து கோரி, வரும் மார்ச் 1ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக இயக்கம் ஒன்றும் தொடங்கப்படும் என்று தெரிவித்தார். நாடு முழுவதும் ஜனநாயக உரிமை நிலைநாட்டப்பட்டிருந்தும் டெல்லிக்கு மட்டும் இன்னமும் அது கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட அவர், மக்கள் வாக்களித்து ஒரு அரசை தேர்ந்தெடுத்த போதிலும் அந்த அரசுக்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லாத நிலை நிலவுவதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்