"ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார்" - நிர்மலா சீதாராமன் தகவல்

பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
ராணுவத்திற்கு பிரதமர் முழு சுதந்திரம் கொடுத்துள்ளார் - நிர்மலா சீதாராமன் தகவல்
x
பாகிஸ்தான் விவகாரத்தில் எந்த முடிவும் எடுக்க, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்துள்ளதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

பெங்களூரூவில் சர்வதேச விமான கண்காட்சி தொடர்பான அறிமுக விழாவில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பாகிஸ்தான் விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து, பிரதமர் மோடி ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுத்திருப்பதாக கூறினார். தக்க நேரத்தில் அதற்கான முடிவு எடுக்கப்படும் என்றும்,  நிர்மலா சீதாரான் தெரிவித்தார். அதே சமயம் இந்தியா சட்டத் திட்டங்களுக்கு உட்பட்டு நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்