"அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம்" - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் கண்டிக்கிறோம் - டெல்லியில் நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
டெல்லியில் இன்று நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைத்து வகையான பயங்கரவாதத்தையும் வன்மையாக கண்டிப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புல்வாமா தாக்குதல் சம்பவம் தொடர்பாக விவாதிப்பதற்காக அனைத்துக் கட்சி கூட்டத்தை மத்திய அரசு இன்று கூட்டியிருந்தது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தலைமையில் நடந்த கூட்டத்தில், பா.ஜ.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்