பாகிஸ்தானை தனிமைப்படுத்த இந்தியா நடவடிக்கை : மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
சர்வதேச சமுதாயத்தில் இருந்து பாகிஸ்தான் தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.
சர்வதேச சமுதாயத்தில் இருந்து பாகிஸ்தான் தனிமைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் துணை ராணுவப்படையினர் மீதான தாக்குதல் தொடர்பான ஆலோசனை கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , தாக்குதலில் தொடர்புடையவர்கள் தக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். இந்தியா தக்க பதிலடி தரும் என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவின் மிக ஆதரவு நாடுகள் பட்டியலில் இருந்து பாகிஸ்தான் விலக்கி வைக்கப் படுவதாகவும் அருண் ஜெட்லி குறிப்பிட்டார்.
Next Story